
பக்கிரிராஜா அப்படின்னு பெயர் வெச்ச தாலே நான் பக்கிரினும் சொல்லேமட்டேன் , இல்லேனும் சொல்லமாட்டேன் !
என்னபத்தி அப்புறம் பேசலாம் , இப்போ இந்த பெயர் காரனத்த மட்டும் தெரிஞ்சிகோங்க.
போன வாரத்துல ஒரு நாள், ஒரு பழைய குமுதம் வார இதழ வேலைவெட்டி இல்லாம புரட்டிக்கிட்டு இருக்கும்போது , குமுதம் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் சார் ஷீரடி சாய்பாபா பத்தி ஒரு தொடர் கட்டுரை எழுதி இருந்ததை பார்க்க நேர்ந்தது . அந்த கட்டுரையில ஷீரடி சாய்பாபா பத்தி குறிப்பிடும்போது , அவர் காலைலே எழுந்துகொள்ளும் போது பக்கிரியகவும், பிறகு பக்தர்களின் அன்பளிப்பை சேரும்போது ஒரு ராஜாவாகவும், அதை மாலையில் அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கும் போது ஒரு வள்ளலாகவும் , இரவு அனைத்தையும் தானமாக கொடுத்தபின் மீண்டும் பக்கிரியகவும் இருப்பார் மகான் ஷிர்டி சாய்பாபா என்று ஆசிரியர் குறிபிடுகிறார்.
பக்கிரி என்றல் தன்கென்று ஒன்றும் இல்லாதவன், என்று என் மரமண்டையில உறைக்கிற மாதிரி பொட்டுன்னு அடிச்சதாலே , இங்கே நமக்கு மட்டும் என்னத்த வாழுது, ஒரு விதத்துல நான் கூட நம் கருணை கடலான ஷிரிடி சாய்பாபா போல பக்கிரி தானே , வரும்போதும் ஒன்றும் இல்லை போகும்போதும் ஒன்றும் எடுதுகிட்டும் போகபோறது இல்லே.
அதனால, இறைவனே எனக்கு இந்த ப்ளாக் ஆரம்பிக்க ஒரு பெயர் தந்ததா மகிழ்ந்து, மகானின் விருப்பத்தின் பெயரில் நான் இந்த பெயரை என் ப்ளாக்குக்கு சூடிக்கொண்டேன்.
இது தான் நான் இந்த ப்ளாக்குக்கு பெயர் வாய்த்த ஒரு குட்டி வரலாறு...!!
பெயர் காரணம் மிக அருமை. நல்ல விசயங்களை நகைச்சுவை கலந்து கூறுவது தங்களுக்கு ஒரு தனி கலை யாக உள்ளது. தொடரட்டும் ...........
ReplyDelete