Monday, January 2, 2012

சுவாரஸ்யம் !

இன்னைக்கி காலைலே பல்லுவிலகிக்கிட்டு இருக்கும்போது , நேத்து என் நண்பன் ஒருத்தன் பேச்சி வாக்கிலே "மச்சி , அவன பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சிய , அவன் எதாவது ஓவரா பண்ணினானா சொல்லுடா , அவன் வண்டவாளத நான் தண்டவாளத்துல ஏத்திடுறேன்." அப்படி நு சொன்னான் ...
அத யோசிச்சிகிட்டே , இவன் எப்படி வண்டவாளத்த தண்டவாளதுல ஏத்துவான், என்ன ஒரு சுவாரஸ்யமான பேச்சு வழக்கு தமிழ்ல , Rhyminga இருக்குன்றதுக்காக அர்த்தமே இல்லாம இருந்தாலும் சுவாரஸ்யமாதான் இருக்குனு நினைச்சிகிட்டே இருக்கும் போது ..
சமையல் கட்டிலே இருந்து என் பொண்டாட்டி குரல் ,,,
கோவமா ....
"ஏங்க பல்ல விளகுரீன்களா, இல்லே படம் எடுக்குறீங்களா"

நாம தான் டென்ஷன் பார்டி ஆச்சே !
"என்னடி கேள்வி இது, உனக்கு என்ன கிறுக்கு கிருக்கு புடிச்சி இருக்கானு" நம்ம சிந்தனை ஓட்டம் வாய் வழியா வெளில வந்துடிச்சி ..

உடனே என் பொண்டாட்டி
"எனக்கு எல்லாம் ஒன்னும் புடிக்காது , ஏன்னா ! அது கூட தானே குடும்பம் நடத்துறேன்"....!

அப்போ தான் என் மண்டைல உரைச்சிது , வாங்கி கட்டிகினா தான் தெரியும் போல, எல்லா பேச்சிக்கும் ஒரு அர்த்தம் இருக்குனு.

1 comment:

  1. sorry brother ennaku ithu sariya puriyalai......sukanyah jay.

    ReplyDelete