இன்னைக்கி காலைலே பல்லுவிலகிக்கிட்டு இருக்கும்போது , நேத்து என் நண்பன் ஒருத்தன் பேச்சி வாக்கிலே "மச்சி , அவன பத்தி எனக்கு தெரியாதுன்னு நினைச்சிய , அவன் எதாவது ஓவரா பண்ணினானா சொல்லுடா , அவன் வண்டவாளத நான் தண்டவாளத்துல ஏத்திடுறேன்." அப்படி நு சொன்னான் ...
அத யோசிச்சிகிட்டே , இவன் எப்படி வண்டவாளத்த தண்டவாளதுல ஏத்துவான், என்ன ஒரு சுவாரஸ்யமான பேச்சு வழக்கு தமிழ்ல , Rhyminga இருக்குன்றதுக்காக அர்த்தமே இல்லாம இருந்தாலும் சுவாரஸ்யமாதான் இருக்குனு நினைச்சிகிட்டே இருக்கும் போது ..சமையல் கட்டிலே இருந்து என் பொண்டாட்டி குரல் ,,,
கோவமா ....
"ஏங்க பல்ல விளகுரீன்களா, இல்லே படம் எடுக்குறீங்களா"
நாம தான் டென்ஷன் பார்டி ஆச்சே !
"என்னடி கேள்வி இது, உனக்கு என்ன கிறுக்கு கிருக்கு புடிச்சி இருக்கானு" நம்ம சிந்தனை ஓட்டம் வாய் வழியா வெளில வந்துடிச்சி ..
"எனக்கு எல்லாம் ஒன்னும் புடிக்காது , ஏன்னா ! அது கூட தானே குடும்பம் நடத்துறேன்"....!
அப்போ தான் என் மண்டைல உரைச்சிது , வாங்கி கட்டிகினா தான் தெரியும் போல, எல்லா பேச்சிக்கும் ஒரு அர்த்தம் இருக்குனு.
sorry brother ennaku ithu sariya puriyalai......sukanyah jay.
ReplyDelete